சிறையில் ஜெயேந்திரருக்கு லேசான மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் இருக்கும் ஜெயேந்திரருக்கு இன்று லேசான மயக்கம் ஏற்பட்டது.
இன்று காலை ஜெயேந்திரர் பூஜை முடித்து பாலுடன் கூடிய கஞ்சி குடித்தார். பின்னர் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்துமருத்துவக்குழு விரைந்து சென்று அவரைப் பரிசோதித்தது.
பரிசோதனையில் அவருக்கு நிமிடத்திற்கு பல்ஸ் 90 ஆகவும், பி.பி., 130/80 என்ற அளவிலும் இருந்தது. இது நார்மல் தான் என்று மருத்துவர்கள் குழுதெரிவித்தது. மேலும், மயக்கத்திற்கான மருந்து மற்றும் மாத்திரைகளும் ஜெயேந்திரருக்கு வழங்கப்பட்டது.
ஜெயேந்திரருக்கு காலையில் பாலுடன் கூடிய கஞ்சியும், மதியம் தயிர் சாதமும், இரவு பூரி அல்லது சப்பாத்தி வழங்கப்படுவதாக சிறைக் கண்காணிப்பாளர்ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications