ஒசூரில் கருணாநிதி, ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு
ஒசூர்:
ஒசூரில் ஜெயேந்திரர் ஆதரவாளர்கள் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் உருவ பொம்மைகளைஎரித்து போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விஸ்வ இந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் தொண்டர்கள் ஜெயேந்திரர் கைதைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒசூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்தப் போராட்டம் நடந்தது. சுமார் 100 பேர் கூடிபோராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கிடையே திடீரென கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் கொடும்பாவிகள்எரிக்கப்பட்டன.
ஜெயேந்திரருக்கு எதிராக கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து அவர்களது கொடும்பாவிகள்எரிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஜெயேந்திரர் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஒசூரில் உள்ள அனைத்ததுஇந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications