காஞ்சி சங்கர மடத்தில் போலீஸ் அதிரடி சோதனை
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தில் இன்று காலை முதல் 11 பேர் கொண்ட போலீஸ் குழு சோதனை செய்து வருகின்றது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான ஆதாரங்கள், கொலைச்சதிக்குக் காரணமானவர்கள், கொலையை நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ஜெயேந்திரர் தொடங்கிய ஜன கல்யாண் அமைப்பின் மாவட்ட செயலாளராக பசுபதி என்பவர் இருந்து வந்தார். இவரது வீடு காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் உள்ளது. இந்த வீட்டிற்கு போலீஸ் படை விரைந்தது.
அப்போது வீட்டில் பசுபதி இல்லை, அவர் ஜெயேந்திரரை சந்திக்க வேலூர் சென்றிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து பசுபதிகுடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்காத போலீஸார் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர்.
சில ஆவணங்களை போலீஸார் அப்போது சேகரித்தனர். சுமார் ஒரு மணி நேர சோதனைக்குப் பின்னர் போலீஸார் அங்கிருந்து சென்றனர். இந்த சோதனையால்நெல்லுக்காரத் தெருவில் ஏராளமானோர் கூடி விட்டனர்.
இந் நிலையில் காஞ்சி சங்கரமடத்திலும் போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சங்கரமடத்தில் பொறுப்பில் இருக்கும் விஸ்வநாதன் என்பவரைபோலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்..