காஞ்சி மடம் திறக்கப்பட்டது; பக்தர்கள்தான் இல்லை !

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து மூடப்பட்ட சங்கர மடம் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் மிக மிக குறைந்த அளவில்தான்மடத்திற்கு வந்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடம் ஜெயேந்திரர் கைதுக்குப் பிறகு மூடப்பட்டது. அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்உள்ள சங்கர மட கிளைகளும் மூடப்பட்டன.

ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான் மடம் திறக்கப்படும் என கூறப்பட்டது. இந் நிலையில் நேற்று மடம்திறக்கப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருவார்கள். ஆனால் நேற்று சொற்பஎண்ணிக்கையில்தான் பக்தர்கள் வந்திருந்தனர்.

வந்தவர்களும் விஜயேந்திரர் எப்போது வருவார் என்ற கேள்வியை மட்டுமே மடத்தினரிடம் கேட்டவண்ணம் இருந்தனர்.மடத்திற்கு வந்தவர்களை தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ள செல்ல அனுமதித்தனர்.

பெரியவரின் சமாதியை வணங்க மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வேறு எங்கும் செல்லக் கூடாது என்று பக்தர்களுக்குமட நிர்வாகிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+