டெல்லி விரைந்தார் லட்சுமி பிரானேஷ்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுந ர் மாற்றம் தொடர்பான வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்குவரவுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் டெல்லி சென்றுள்ளார்.
அவருடன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜுலுவும் சென்றுள்ளார். இந்த வழக்குவிசாரணையின்போது மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேயானதொலைபேசி பேச்சை அறிக்கை வடிவில் நீதிமன்றத்தில் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசும் லட்சுமி பிரானேஷிடம் விளக்கம் கேட்டது நினைவிருக்கலாம்.
தற்போது ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து டெல்லி வரும் லட்சுமிபிரானேஷிடம் மத்திய அரசு விளக்கம் கேட்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications