அதிரடிப்படை மீது வழக்கு: முத்துலட்சுமி
மேட்டூர்:
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றுவீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கொளத்தூர் போலீசில் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 18ம் தேதி எனது கணவர் வீரப்பனை அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக எனக்கு தகவல் வந்தது. உடனே அவரதுஉடலைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு பிரேத பரிசோதனை முடியும் வரை என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. அதற்குப் பின்னர்
அவரது முகத்தை பார்க்க மட்டுமே முடிந்தது. அதன்பிறகு எனது கணவர் உடலை எங்கள் குல வழக்கப்படி புதைக்கவிடாமல்எரிக்க போலீஸார் முயற்சி செய்தனர்.
என் கணவரது முகத்தில் உள்ள காயத்தை பார்த்தால் அவரை சித்ரவதை செய்து சுட்டுக் கொன்றது போல தெரிகிறது. எனதுகணவர் சாவில் அதிரடிப்படையினர் மீது சந்தேகம் இருக்கிறது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அதிரடிப்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முத்துலட்சுமிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications