ஜெயேந்திரருடன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் நாளை சந்திப்பு
டெல்லி & சென்னை
காஞ்சி சங்கராச்சாரியாரை முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்ணான்டஸ், முரளி மனோகர் ஜோஷி மற்றும் பாஜக தேசியசெயலாளர் இல. கணேசன் ஆகியோர் நாளை வேலூர் சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது அயோத்தி பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்பது என்றும், கொலை வழக்கில் கைதாகி உள்ளஜெயேந்திரரை பார்க்க நாளை ஜார்ஜ் பெர்ணான்டஸ் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஜோஷியும் சந்திக்கிறார்:
இதற்கிடையே முரளி மனோகர் ஜோஷியும் நாளை ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்திக்கிறார். இதற்காக நேற்றிரவு சென்னைவந்த ஜோஷி, ஜெயேந்திரரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தார்.
ஆனால் ரம்ஜான் விடுமுறை என்பதால் அவருக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. நாளை அவர் ஜெயேந்திரரைசந்திக்கலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ஜெயேந்திரரை இன்றே சந்திக்க தமிழக அரசு அனுமதிக்கும் என்று தான் கருதியாக ஜோஷிகுறிப்பிட்டார்.
நாளை ஜெயேந்திரரைக் காண இல. கணேசனும் ஜோஷியுடன் உடன் செல்கிறார்.