சுபாஷன் ரெட்டி டிரான்ஸ்பர்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளா. இதற்கானஉத்தரவை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி பணிபுரிந்து வந்தார். மதுரையில் உயர் நீதிமன்றக் கிளைஅமைப்பது, அதற்கான எல்லைகளை வரையறுப்பது போன்றவற்றில் தலைமை நீதிபதிக்கு எதிராக சென்னை வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவரை மாற்றக் கோரி நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இந் நிலையில் அவர் கேரள உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அப்துல் கலாம் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் வரும் 1ம் தேதிக்குள் இந்த பதவியை அவர் ஏற்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கட்ஜு நியமிக்கப்படஇருக்கிறார்.












Click it and Unblock the Notifications