சங்கராச்சாரியாரிடம் எஸ்.பி. டேவிட்சன் விசாரணை
காஞ்-சி-பு-ர-ம்:
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மூன்றாவது நாளாக இன்றும் காலை முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது.
காஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து சங்கராச்சாரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை விவரங்களைபோலீசார் வெளியிடாவிட்டாலும், கொலை தொடர்பாக தாங்கள் திரட்டிய ஆதாரங்களைக் காட்டி சங்கராச்சாரியாரை போலீசார்துருவி வருகின்றனர்.
3 முறை மருத்துவ சோதனை:
அவருக்கு தினமும் 3 முறை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மூத்த அரசு மருத்துவர் தலைமையிலான குழுஅவருக்கு 8 மணி நேரத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை நடத்தி வருகிறது.
உணவு சமைக்கும் பிராமணர்:
அவருக்கு உணவு சமைக்க பிராமணரான ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமைத்துத் தரும் உணவேசங்கராச்சாரியாரிடம் அளிக்கப்படுகிறது.
மேலும் பூஜைகள் போன்றவற்றை நடத்தவும் சங்கராச்சாரியாருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இதுவரை சங்கராச்சாரியாரிடம் சுமார் 400 கேள்விகள் வரை கேட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவற்றுக்கு அவர்பதிலே சொல்லவில்லை, அமைதியாக அவர் அமர்ந்திருந்தார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை அவரது போலீஸ் காவல் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை காலை 10.30 மணிக்கு அவர் காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், விசாரணைக்கு ஜெயேந்திரர் ஒத்துழைப்பு தர மறுத்து வருவதால் விரக்தி அடைந்துள்ள போலீசார், அவரது காவலைமேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications