அப்பு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில்அவனது பாஸ்போர்ட்டை சென்னை உயர் நீதிமன்றம் முடக்கியுள்ளது.

சங்கரராமனைக் கொலை செய்ய கூலிப் படையைத் தயார் செய்த கன்சாமி கோபால் கிருஷ்ணசாமி என்ற அப்பு மீது ஏற்கனவேஇன்னொரு வழக்கில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவன் தாக்கல் செய்த ஒரு மனுவில், தான் சிகிச்சைக்காகஅமெரிக்கா செல்ல விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்குமாறும் கோரியிருந்தான்.

அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அப்பு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியது. இந் நிலையில், சங்கரராமன் கொலைவழக்கில் அப்பு முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அப்பு தலைமறைவானான்.

தலைமறைவாகி விட்ட அவன் அமெரிக்காவுக்குத் தப்பிவிடுவதைத் தடுக்க, காவல்துறையின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்பு மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது சங்கரராமன்கொலை வழக்கிலும் தேடப்பட்டு வருகிறான். எனவே, அவன் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பாஸ்போர்ட்டைமுடக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி என். தினகர், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.விசாரணைக்குப் பின், அப்பு வெளிநாடு செல்ல பிறப்பிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தும், அப்புவின் பாஸ்போர்ட்டைமுடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+