அடித்து, உதைத்து வாக்குமூலம் வாங்கினர்: கதிரவன் !
காஞ்சிபுரம்:
போலீசார் தன்னை அடித்து, துன்புறுத்தி தான் சங்கராச்சாரியாருக்கும் அப்புவுக்கும் எதிராக வாக்குமூலம் வாங்கியதாக,சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
போலீஸார் 5 நாட்களாக தன்னை பல விதத்திலும் கடுமையாக சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கியதாக பரபரப்பானபுகாரைத் தெரிவித்துள்ளார்.
சங்கரராமனைக் கொலை செய்த அப்பு தலைமையிலான கூலிப் படையில் இடம் பெற்றிருந்தவந் கதிரவன். இவரை சென்னைகோடம்பாக்கத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அப்புவின் டிரைவர் மற்றும் அடியாளான கதிரவன் அப்ரூவராக மாற ஒப்புக் கொண்டதாகக் கூறி அவனை காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் அவனும் மூடிய அறையில் ரகசிய வாக்குமூலம் தந்தான்.
அதில் இந்தக் கொலையைச் செய்ய தூண்டியது சங்கராச்சாரியார் தான் என்றும் அப்பு கொடுத்த உத்தரவையடுத்து இந்தக்கொலையை 6 பேர் கொண்ட கோஷ்டி செய்ததாகக் கூறியிருந்தான்.
வாக்குமூலம் தந்த பின்னர் மீண்டும் போலீஸ் காவலிலேயே இவன் ஒப்படைக்கப்பட்டான். இந் நிலையில் அவனது போலீஸ்காவல் முடிவடைந்தது. இந்தக் காவல் நீட்டிப்புக்கா காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரவன் மீண்டும்ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது நீதிபதி உத்தமராஜிடம் கதிரவன் கூறியதாவது:
ஐயா, கடந்த 3ம் தேதி எனது முதலாளி அப்புவை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ளஓட்டலுக்குச் சென்றேன். அப்போது இரவு 10 மணி. அந்த ஹோட்டலுக்கு மப்டி உடையில் வந்த போலீசார், சுந்தர் யார்டா என்றுகேட்டபடி அங்கிருந்த என்னையும் என் நண்பர்களையும் பிடித்தனர்.
அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோயம்பேடு போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு என்னை அடித்து உதைத்தனர். உடைகளைப் பறித்துக் கொண்டு இரவு 12 மணி வரை அடித்தனர்.
நள்ளிரவு வாக்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்குள்ளஒரு வீட்டில் வைத்து என்னை போலீஸார் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
அடுத்த நாள் மாலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாரமவுண்ட் ஹோட்டலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அறை எண் 108 மற்றும்109ல் நவம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை அடைத்து வைத்து அடித்தனர். பல விதத்திலும் துன்புறுத்தினர்.
பல சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டேன். பின்னர் வெற்றுத் தாள்களில் வாக்குமூலம் என்ற பெயரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர். நவம்பர் 9ம் தேதி காஞ்சிபுரம் கூடுதல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு என்னைக் கொண்டு சென்றனர்.
அங்கு தாசில்தார் முன்னிலையில் இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தினர்.அதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக வீடியோப் பதிவின்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் எனக்குப் பயிற்சி அளித்தனர். இந் நிலையில் நவம்பர் 10ம்தேதி என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஐந்து நாள் போலீஸ் காவலில் போலீஸார் எடுத்துச் சென்றனர். அப்போதும் சித்திரவதைதொடர்ந்தது.
என்னைப் பார்க்க சிறைக்குள் எனது உறவினர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. எனது சகோதரர் பார்க்க வந்தபோதுஅவரைத் தடுத்த போலீஸார் அவரையும் எங்கோ அழைத்துச் சென்று விட்டனர். எனக்கு ஆஸ்த்மா பிரச்சினை உள்ளது. இதற்குசிகிச்சை தரவும் காவல்துறை மறுத்து விட்டது என்றார் கதிரவன்.
கதிரவன் திடீரென்று போலீஸார் மீது பரபரப்பு புகார்களைக் கூறியுள்ளதன் மூலம், சங்கர மடத்துக்கு எதிராக அவன் முன்பு தந்தஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. வழக்கிலும் புதிய திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது.
சின்னாவும் பல்டி:
அதேபோல முன்பு ஒப்புதல் வாக்குமுலம் தந்த சின்னா என்ற ரஜினியும் தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தித் தான் இந்தக் கொலையில் வாக்குமூலம்வாங்கினர் என்று கூறியுள்ளார். போலீசார் அடித்த அடியில் தனது பற்கள் கூட உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளான்.
பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள் !!
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அது விஸ்கி இல்ல! Perfume Bottle! பார்க்க மதுபாட்டில் மாதிரியே இருந்ததால் கன்பியூஷன்! நிர்மல்குமார் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications