ராஜ் டிவியின் ஒளிபரப்பு சாதனங்கள் பறிமுதல்!
சென்னை:
சன் டிவிக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவியின் நேரடி ஒளிபரப்பு சாதனங்கள்,வெளிப்புற ஒளிபரப்பு வாகனம் ஆகியவற்றை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பொறுப்பில் உள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் ராஜ் டிவிக்கு எதிரானநடவடிக்கையில் இறங்கியது.
முதலில் லைசென்ஸ் விதிகளை மீறிய ராஜ் டிவியின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ராஜ் டிவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் இருந்து அப்-லிங்கிங் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட ராஜ் டிவி கடந்த சில நாட்களாகவெளிநாட்டில் இருந்து செயற்கைக் கோளுக்கு அப்-லிங் செய்து தனது ஒளிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில், நேற்று ராஜ் டிவியின் சென்னை தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு சுங்கத துறை அதிகாரிகள் குழுவந்தது. ராஜ் டிவியின் அலுவலகத்தில் இருந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள வெளிப்புற ஒளிபரப்பு வேன், ரூ. 1.3 கோடி மதிப்புள்ளநேரடி ஒளிபரப்புக்கான சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சாதனம் மற்றும் வாகனத்தை 3 மாதங்களுக்கு முன்புதான் ராஜ் டிவி நிர்வாகம் இறக்குமதி செய்திருந்தது. இறக்குமதிசெய்வதற்குரிய அனுமதியை சுங்கத் துறையிடமிருந்து ராஜ் டிவி நிர்வாகம் பெறவில்லை என்பதால் இக் கருவிகள் பறிமுதல்செய்யப்பட்டதாக சுங்கத்துறை கூறியுள்ளது.
அனுமதியில்லாமல் நடந்த இந்த இறக்குமதி குறித்து கடந்த பா.ஜ.க. ஆட்சியிலேயே இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. ஆனால்,மூத்த பாஜக தலைவர்களை சரி கட்டியும், தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு மூலமும் பிரச்சனையை அமுக்கியது ராஜ்டிவி.
இந் நிலையில் இப்போது சுங்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது.
மாறன் வசமுள்ள தொலைத் தொடர்புத் துறை மற்றும் திமுகவின் இன்னொரு அமைச்சரான நிதித்துறை இணையமைச்சர்பழனிமாணிக்கமும் (சங்கத்துறை இவர் கண்ட்ரோலில் தான் வருகிறது) ஆகியோர் கொடுத்த நெருக்குதல் காரணமாகவேசுங்கத்துறை இந்த பறிமுதல் நடவடிக்கையில் இறங்கியதாக புகார் கூறப்படுகிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications