பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஜெயேந்திரர் விருது!
மும்பை:
இசைத் துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டுக்கான ஜெயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் விருது வழங்கப்படுகிறது.
சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் சிறந்த தலைமைப் பண்பு, ஆன்மீக விரிவுரை, பக்திப்பாடல்கள்ஆகியவற்றில் சிறந்து விளங்குவோர்களுக்கு காஞ்சி பரமாச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெயரிலும்,ஜெயேந்திரர் பெயரிலும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.
மும்பை சண்முகானந்த நுண்கலை, சங்கீத சபையின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெயரிலான விருதுடன் ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணமும், வெள்ளி விளக்கு, பாராட்டுப்பத்திரம் ஆகியவையும் தரப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் மும்பை சண்முகானந்த அரங்கில் அடுத்த மாதம் 11-ம் தேதிநடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.
பக்திப்பாடல்களைப் பாடும் பித்துக்குளி முருகதாஸ், திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.சி. பந்த், விஞ்ஞானி மஷேல்கர்ஆகியோர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இசைத் துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டுக்கான ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், வெள்ளி விளக்கு, பாராட்டுப் பத்திரம் ஆகியவைவழங்கப்படும். அடுத்த மாதம் 5ம் தேதி மும்பை சண்முகானந்தா அரங்கில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத் தகவலை தென்னிந்திய கல்விச் சங்கம் மும்பையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.