இந்தியாவுடன் வர்த்தகம்: மலேசியா தீவிரம்
சென்னை:
இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம்மலேசியாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
மலேசியாவில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மையத்தின் தலைவர் செள ஜூ மெங் இது தொடர்பாக நிருபர்களிடம்கூறியதாவது:
தகவல் தொலை தொடர்பு, கால் சென்டர் மற்றும் உயிர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகஉறவை அதிகரிக்கும் வகையில் மலேசியாவில் வருகிற ஜனவரி மாதம் 17, 18 தேதிகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாநாட்டை மலேசியா பிரதமர் அப்துல்லா அகமது பதாவி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் சார்பில் முக்கிய அமைச்சரும்திட்டக்குழு அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த இந்திய வியபாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் இந்த வாய்ப்பைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மலேசியாவில் இரண்டு மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் இரு தரப்பு வர்த்தகத்தில் சீனாவை விட இந்தியாபின்தங்கியே இருக்கிறது.
சீனாவுடன் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவாக இருக்கும் வர்த்தகம் இந்தியாவுடன் 4 பில்லியன் அமெரிக்கடாலர்களாக மட்டுமே இருக்கிறது.
மலேசியா தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சீனாவிற்கும் நுழைவாயிலாக உள்ளது. மலேசிய மக்கள் தொகையில் சீனர்களின்எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும்.
இந்தியாவில் உள்கட்டமைப்பு, எண்ணெய், மின்சாரம், தொலைதொடர்பு, சுற்றுலா மற்றும் மனித வள மேம்பாடு ஆகியதுறைகளில் 450 மில்லியன் டாலர் அளவிற்கு மலேசியா முதலீடு செய்துள்ளது. இதை அதிகப்படுத்த முடியும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications