விபச்சார வழக்கு: விதவையை மிரட்டிய பெண் எஸ்ஐ
பொன்னேரி:
புகார் கொடுக்கச் சென்ற என்னை விபச்சார வழக்கில் உள்ளே தள்ளவிடுவதாக பெண் சப் இன்ஸ்பெக்டர் சித்ரவதை செய்தார் என்றுவிதவைப் பெண் சுகிர்தா குற்றம்சாட்டியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு திடீர் நகரைச் சேர்ந்த இளம் விதவை சுகிர்தா (26). இவருக்கு காண்டிராக்டர் ரவி என்பவர்டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நிர்வாணமாக போட்டோ எடுத்துள்ளார்.
அந்த போட்டோக்களைக் காட்டி மிரட்டி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுகிர்தாவை மிரட்டியுள்ளார். இதனையடுத்துசுகிர்தா பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கு அவரை பெண் சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலைசித்ரவதை செய்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சுகிர்தா நிருபர்களிடம் கூறியதாவது:
புகார் கொடுக்கச் சென்ற என்னிடம் ரூ.4,.000 பணம் வாங்கினார்கள். அதோடு என்னை அடித்து உதைத்தனர். ரவியைத் திருமணம்செய்துகொள், அல்லது ரூ.50,000 பணம் கொடு. இல்லையென்றால் விபச்சார வழக்கில் திருமணம் செய்து கொள்வேன் என்றுஅந்த பெண் எஸ்.ஐ. மிரட்டினார்.
இதற்காக ரவி மற்றும் மணிமேகலை மீது வழக்கு தொடரவிருக்கிறேன் என்று கூறினார்.