பிரபாகரனின் 50வது பிறந்தநாள்
டெல்லி:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் நேற்று தனது 50வது வயதை எட்டினார். இதையொட்டி இலங்கையின்வட-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் தமிழர்கள் கேக் வெட்டி அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.
வல்வெட்டித்துறையில் அப் பகுதி மக்கள் 50 கிலோ எடையுள்ள கேக் செய்து அதை வெட்டியும், புலிகளின் கொடியை ஏற்றியும்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இனப் போரில் உயிர் நீத்த தங்களது 17,800 சக வீரர்களுக்கும் விடுதலைப் புலிகள் கடந்த ஒரு வார காலமாக அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். புலிகள் அனுசரிக்கும் இந்த மாவீரர் வாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி இன்று பிரபாகரன் பொது மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார். தனது பிறந்த தினத்தின்போது சக வீரர்களின் தியாகத்தைநினைவுகூறும் வாரத்தை அனுசரிக்கும் பிரபாகரன், பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரர் வார நிகழ்ச்சிகளைத் தடுக்கும் நோக்கில் சிங்கள வெறியர்களும் ஜனதா விமுக்தி பெரமுனா கும்பலும் பல இடங்களில்கலவரத்தை ஏற்படுத்த முயன்றன. இதையடுத்து திரிகோணமலை மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் ஊரடங்குஉத்தரவு அமலாக்கப்பட்டது.
புலிகளும் தமிழர்களும் நடத்திய அஞ்சலிக் கூட்டங்களைக் குலைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் ஊர்வலம் செல்ல சிங்களத்தீவிரவாதிகள் முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திரிகோணமலையில் ஒரு பஸ்சின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதை புலிகள் நடத்தியதாக ராணுவம் குற்றம் சாட்டியது. ஆனால், அதைமறுத்த விடுதலைப் புலிகள், இந்தத் தாக்குதலை ராணுவம் தான் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களிலும் புலிகள் தங்களது கொடியை ஏற்றியதாகவும் இலங்கை அரசு புகார்கூறியுள்ளது.
ஆனால் இதையும் மறுத்துள்ள விடுதலைப் புலிகள், கடந்த ஒரு வாரமாக அனுசரிக்கப்பட்டு வரும் மாவீரர் வாரத்தை சீர்குலைக்க இலங்கைராணுவம் பலவிதமான செயல்களில் ஈடுபட்டுள்ளது. இது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நார்வே தலைமையிலான இலங்கை அமைதிப் பாதுகாப்புப் குழுவினர் நேற்று விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேசினர்.அப்போது அவர்களிடம் ராணுவத்தின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து புலிகள் புகார் தெரிவித்தனர்.
இனப் போரில் உயிர் நீத்த 263 தற்கொலைப் படையினர் உள்பட 17,780 விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் வாரத்தை புலிகள்கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனுசரித்து வருகின்றனர். இந்த ஒரு வாரகால நிகழ்ச்சிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
இதையொட்டி இன்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொது மக்களிடையே உரை நிகழ்த்துகிறார்.












Click it and Unblock the Notifications