For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் விசாரணைக்கு மப்பில் வந்த சாமியார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெண் சாவு தொடர்பான விசாரணைக்கு அழைத்தபோது குடிபோதையில் வந்த சாமியார் மீது புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தது போலீஸ்.

சென்னை ஆலந்தூர் பகுதியில் ரஜினி என்ற பெண் இறந்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் என்ற சாமியார் மீதுரஜினியின் தந்தை புகார் கொடுத்தார்.

தனது மகள் ரஜினியை சாமியார் சம்பந்தம் கட்டாயப்படுத்தித் தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும் தற்போது அவரைக் கொலைசெய்து விட்டு ரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக நாடகமாடுவதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து சாமியார் சம்பந்தம் மற்றும் அவரது மனைவி லோகநாயகி ஆகியோரை ஆலந்தூர் போலீஸார் விசாரணைக்குஅழைத்தனர். விசாரணைக்கு வந்த சம்பந்தம் நல்ல குடிபோதையில் இருந்துள்ளார்.

அதிர்ந்து போன போலீஸார் அவரிடம் ரஜினி சாவு குறித்து விசாரித்தனர். அப்போது ரஜினி சாவுக்கும், அவருக்கும் சம்பந்தம்இல்லை என்று தெரிய வந்தது. இதனால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்தனர்.

ஆனால் போலீஸ் விசாரணைக்கு குடித்து விட்டு வந்ததால், அவர் மீது புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X