2வது ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் (கொலை முயற்சி வழக்கு) ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணைநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த முன்னாள் சங்கர மட பக்தர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை பைக்குகளில்வந்த ஒரு கும்பல் அரிவாள்களால் வெட்டியது. இதில் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர். இதையடுத்து அவர்களை ஆட்டோ ஏற்றி கொல்லமுயற்சி நடந்தது.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் இப்போது ஜெயேந்திரரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் சார்பில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி.கணேஷ்,ஜெயேந்திரர் தொடர்பான மற்றொரு வழக்கில் (சங்கரராமன் கொலை வழக்கு) ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும், கேஸ் டைரியும் உயர் நீதிமன்றத்தில் வாதாடும் அரசு வழக்கறிஞரிடம்உள்ளது.
எனவே அந்த வழக்கு விசாரணை முடியும் வரை இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் உள்ள ஜாமீன் மனுவுக்கும்,இதற்கும் ஒரு சம்பந்தம் இல்லை என்றார்.
ஆனால், கேஸ் டைரி இல்லாமல் இங்கு வாதாடுவதில் பலன் இல்லை என்பதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர் உணர வேண்டும் என்றுடி.வி.கணேஷ் கூறினார்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி முருகேசன் ஒத்தி வைத்தார்.
பின்னர் 3 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போதும், உயர் நீதிமன்ற விசாரணை தொடர்வதைச் சுட்டிக் காட்டிவிசாரணையை மீண்டும் ஒத்தி வைக்கக் கோரினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இரு ஜாமீன் மனுக்களும் இன்று ஒரே நாளில் விசாரணைக்கு வந்ததால் இரு நீதிமன்ற வளாகங்களிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications