For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: அவகாசம் கேட்கும் சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமி தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க இன்னும் 3 மாத கால அவகாசம் கோரி மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட போலீஸார் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த பாலியல் தொடர்பு, அவரது உறவினர்களை போலீஸார் கடத்திச்சென்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.

2 மாதங்களில் இந்த விசாரணைகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு மதுரை நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. இந்தக் கெடு நாளையுடன் (நவம்பர் 30) முடிவடைகிறது.

இந் நிலையில், சிபிஐயின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பெறப்பட்ட வாக்குமூலங்கள், கைப்பற்றப்பட்டஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும், இன்னும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், விசாரணை காலத்தை மேலும் 3 மாதங்களுக்குநீட்டிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X