For Daily Alerts
Just In
பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்:
அணு குண்டை ஏந்திச் செல்லும் திறன் மிக்க ஏவுகணையை இன்று பாகிஸ்தான் ஏவி சோதனையிட்டது.
290 கி.மீ. சென்று தாக்கும் திறன் கொண்ட கஸான்வி என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இதற்கு முன் இருமுறை ஏவியுள்ளது. கடந்தஅக்டோபர் 12ம் தேதி நீண்டதூரம் சென்று தாக்கும் கவ்ரி-5 என்ற ஏவுகணையையும் பாகிஸ்தான் சோதனையிட்டது.
இப்போது இந்தியா-பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த கஸான்வி ஏவுகணை சோதனையைநடத்தியுள்ளது அந் நாடு.
Comments