அத்துமீறிய ஜெயேந்திரர்: பெண் எழுத்தாளர் புகார்
காஞ்சிபுரம்:
தன்னிடம் ஜெயேந்திரர் அத்துமீறி நடக்க முயன்றதாக பிரபல பெண் எழுத்தாளர் தந்த புகாரை போலீசார் விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.
மிகவும் பிரபலமான அந்தப் பெண் எழுத்தாளர் பல மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு கண் கலங்கவந்தார். வந்தவர், ஜெயேந்திரர் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்து மடத்திலிருந்து தான்தப்பி வந்ததாகவும் அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.
மேலும் அது குறித்து எஸ்.பியிடம் புகாரும் கொடுத்துள்ளார். இந்த புகாரை வாங்கிய எஸ்.பி. அதன்மீது என்ன நடவடிக்கைஎடுப்பது என்று புரியாமல் காவல்துறை தலைமைக்குத் தகவல் தர, அப்படியே அடக்கி வாசிக்கும்படி உத்தரவு வந்துள்ளது.
இதையடுத்து அந்தப் புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. முறையான எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
இப்போது கொலை விவகாரமும் மடத்தின் பெண் தொடர்புகள் குறித்த விவகாரங்களும் வெடிக்க ஆரம்பித்துள்ளதால், இந்தபெண் எழுத்தாளர் தந்த புகாரும் தூசி தட்டப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாலியல் புகார்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
மடத்திலேயே விஜயேந்திரரின் தம்பி ரகு நடத்திய காம லீலைகள், சங்கராச்சாரியாருக்கு நெருக்கமான ரவிசுப்பிரமணியத்தின் குஜால் தொடர்புகள், ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்த சியாமளாவின் சங்கர மட தொடர்புகள்,
வேறு சமூக வாலிபரை காதல் மணம் புரிந்த ஒரு அக்ரஹாரப் பெண்ணை மடத்துக்கு நெருக்கமான கும்பல் தங்கள்கட்டுப்பாட்டில் வைத்து பாலியல்ரீதியில் நாசப்படுத்தியது என பல விதமான பாலியல் புகார்கள் போலீசாரிடம்அடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விஷயங்களை ஆராய ஆரம்பித்துள்ள போலீசார் செக்ஸ் புகார் கொடுத்த பெண் எழுத்தாளரிடமும்விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.
இது தவிர மடத்துக்கு முக்கிய குடும்பத்துத்துப் பெண்களை வளைக்கவே ஒரு கும்பல் இயங்கி வந்ததாகவும்,அவர்கள் காஞ்சிபுரம் வந்தால் தனி கார், தனி பங்களா ஒதுக்கி கவனிப்பது, காஸ்ட்லியான பட்டுப் புடவைகளைத்தந்து வளைப்பது போன்ற செயல்களிலும் மடத்தில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த விஷயங்கள் எல்லாமே சங்கரராமனின் கடிதங்களிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மடத்தைக்கெடுக்கும் ஸ்தீரிகளின் தொடர்புகள் என்ற பெயரில் இந்த விஷயங்களை சங்கரராமன் புட்டுப்புட்டுவைத்துள்ளார்.
இந்தப் புகார்களில் உண்மை இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், பெண் போலீசைக் கொண்டதனிப்படையை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படைக்கு சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் விட்டாபாய் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications