கொலை: தொடர்பை ஒப்புக் கொண்ட ஜெயேந்திரர்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குள்ள தொடர்பை விசாரணையின்போது அழுதபடியே ஜெயேந்திரர் ஒப்புக் கொண்டதாக போலீசார்கூறியுள்ளனர்.
சங்கரராமன் கொல்லப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சங்கராச்சாரியாரின் மனு மீதுஇன்று நடந்த விசாரணையில் பேசிய போலீஸ் தரப்பு வழக்கறிஞர் துல்சி,
சங்கராச்சாரியாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குள்ள தொடர்பைஅழுதபடியே ஒப்புக் கொண்டார். இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக இப்போது சங்கராச்சாரியார் வருத்தப்பட்டுள்ளார். இதுவும் வீடியோவில் இருக்கிறது என்றார்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையும் நடக்கும் என நீதிபதி பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications