அத்வானிக்கு வீரமணி கடும் கண்டனம்
தஞ்சாவூர்:
சங்கராச்சாரியார் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு பாஜக தலைவர் அத்வானி கோரியுள்ளதற்குதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உரிய ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டே தமிழககாவல்துறை ஜெயேந்திரரை கைது செய்துள்ளது.
இதற்காக தமிழக அரசையும், குறிப்பாக முதல்வரையும் பாராட்டி திராவிடர் கழகம் தீர்மானம்நிறைவேற்றியுள்ளோம்.
ஜெயேந்திரர் கைது தொடர்பாகவும், அதுதொடர்பான வழக்கு விசாரணையையும் காஞ்சிபுரம் நீதிமன்றம் முதல்உச்ச நீதிமன்றம் வரை யாரும் தமிழக அரசை குறை சொல்லவில்லை.
இந்த நிலையில் அத்வானிக்கு மட்டும் என்ன குறை தெரிந்தது?. ஜெயேந்திரர் சம்பந்தபட்ட கொலை வழக்கைவேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு அத்வானி கோரியுள்ளது கண்டனத்துக்குரியது.
ஜெயேந்திரர் சாதாரண வழக்கில் கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் கூட அவரைமனித நேயத்துடன் தமிழக அரசு, குறிப்பாக, முதல்வர் நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றார்.