தர்மபுரியை காலி செய்த முத்துலட்சுமி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து காலி செய்து கொண்டு கிளம்பியுள்ளார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன் கொல்லப்பட்டபோது தர்மபுரி அருகே ஓட்டப்பட்டியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார் முத்துலட்சுமி. தனது பெயரைசங்கீதா என்றும், தனது கணவர் துபாயில் இருப்பதாகவும் கூறிவிட்டு அங்கு வசித்து வந்தார்.
இந் நிலையில் வீரப்பன் சாவையடுத்து முத்துலட்சுமிக்கு தொல்லை அதிகரித்துவிட்டது. இந்த வீட்டுக்கு கூட்டமாக வந்துவேடிக்கை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
இதையடுத்து வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் இப்போது சேலத்தில் ஒரு வீடு பார்த்து தங்கியிருப்பதாகக்தெரிகிறது.












Click it and Unblock the Notifications