கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது: ராமதாஸ்
வந்தவாசி:
கிணறு வெட்ட பூதம் கிளம்புவது மாதிரி சங்கராச்சாரியார் விஷயத்தில் பல மர்மங்கள் வெளி வந்து கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வந்தவாசியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சங்கரராமன் கொலை, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, இதைத் தவிர 1985ம் ஆண்டில் மடத்தில் படித்த இரு கேரள மாணவர்கள் சாவில் மர்மம் என மூன்றாவதாக ஒரு வழக்கையும் சொல்கிறார்கள்.
இதற்காக போலீஸ் படை கேரளாவுக்கு சென்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் சங்கராச்சாரியாராக ஜெயேந்திரர் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஒரு முழு விசாரணைக்கு உத்தரவிடலாம்.
அதே நேரத்தில் சங்கராச்சாரியார் கைது குறித்து திமுக தலைவர் கருணாநிதி சந்தேகங்கள் எழுப்பியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. அவர் சொல்வதை முழுவதுமாகப் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரைக் குறை சொல்லக் கூடாது.
திமுகவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்க்க முயல்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications