சேதுவுக்கு எதிராய் தீக்குளிப்பு முயற்சி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அத் திட்டத்தை எதிர்த்து தூத்துக்குடிமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மீனவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வின்சென்ட என்ற மீனவர் வந்தார். கையில்மண்ணெண்ணையுடன் வந்த அவர் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து கோஷமிட்டார்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்று கோஷமிட்டபடியேஉடல்லி மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்களும், போலீஸாரும் அவர் மீது பாய்ந்து தீக்குளிப்பதைத்தடுத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications