டிசம்பர் 6: பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்துவன்முறைச் சம்பவங்கள், அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை ஜெயேந்திரர் கைது விஷயமும் சேர்ந்து கொண்டால், மத அமைதிக்குப் பூசல் விளைவிக்கும் கும்பல்களைக்கட்டுப்பாட்டில் வைக்க அதிக கவனம் காட்டப்பட்டு வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல்ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் முக்கிய கோவில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு பக்தர்களும் சோதனையிடப்பட்ட பின்னரேஅனுமதிக்கப்படுகிறார்கள்.
ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள், அவர்களது பைகள், பெட்டிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இருரயில் நிலையங்களிலும் 100 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தண்டவாளங்களையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரயில்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.சரக்குப் பெட்டிகளையும் மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் சோதனை நடத்திய பின்னரே ரயில்களில் ஏற்ற அனுமதிக்கிறார்கள்.
பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவோரும் பிடித்து விசாரிக்கப்படுகிறார்கள்.
சென்னை தவிர பதற்றம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.