8ம் தேதி ஜெ. ஆண்டிப்பட்டி பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 8ம் தேதி தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
வீரப்பன், வீராணம், சங்கராச்சாரியார் விஷயங்களால் ஜெயலலிதாவின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வரும்நிலையில் குஷியாகியிருக்கிறார் ஜெயலலிதா.
உளவுப் பிரிவினர் தந்துள்ள பீட்-பேக்கும் சாதகமாகவே இருக்க, மக்களவைத் தேர்தல் தோல்வி ஜுரத்தில் இருந்து ஒருவழியாகஜெயலலிதா வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் மக்கள் சந்திப்பு வேலைகளில் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.அங்கு அரசின் சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
8ம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆண்டிப்பட்டசெல்கிறார். அங்கு பல நூறு கோடி அளவுக்கு உதவித் திட்டங்களை துவக்கி வைக்கும் ஜெயலலிதா அங்கிந்து தூத்துக்குடி செல்கிறார்.
அங்கு வாகைக்குளத்தில் அனல் மின் நிலைய விழாவிலும், இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தில் பின்னர் ஆசியாவின்மிகப் பெரிய காற்றாலைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி, நெல்லை விழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான். ஆனால், ஆண்டிப்பட்ட நலத்திட்ட விழா திடீரென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications