ஜெயலட்சுமி: போலீஸ் பதில் மனு
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
போலீஸார் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கையும், அவரது குடும்ப உறுப்பினர்களை போலீஸார் கடத்தப்பட்டதாககூறப்படுவது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜெயலட்சுமி பாலியல் புகார் வழக்கில் இதுவரை 92 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலட்சுமியின் குடும்பத்தினர்கடத்தப்பட்ட வழக்கில் 18 பேரிடம் சிபிஐ விசாரித்து முடித்துள்ளது.
இந்த விசாரணைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை சிபிஐ அதிகாரியான சிவாஜி, நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இதில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
சிபிஐயின் இந்த மனு இன்று நீதிபதிகள் சொக்கலிங்கம், சிங்காரவேலர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications