ஜெயேந்திரரை சந்திக்க வந்து ஏமாந்த நடராஜன்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
| ஜெயேந்திரரை சந்திக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்நடராஜன், அவரை சந்திக்க அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
கடந்த வாரம் ஜெயேந்திரரை சந்திக்க மனு கொடுத்தார் நடராஜன். ஆனால், அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து காஞ்சிபுரம் வரைவந்துவிட்டுத் திரும்பிச் சென்றார். இந் நிலையில் நேற்று மீண்டும் வேலூர் சிறைக்கு வந்தார். ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி வேண்டும் என்றார். ஆனால் அவரை சிறைக்குள்அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். |
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் நான் ஜெயேந்திரரை சந்தித்து ஆறுதல்பெறுவேன். அந்த வகையில், தனிப்பட்ட முறையில்தான் தற்போது ஜெயேந்திரரை பார்க்க வந்தேன். ஆனால், அனுமதிக்க மறுக்கிறார்கள்என்றார்.
காரில் அமர்ந்தபடி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்த நடராஜன், 4 மணி நேரத்துக்குப் பின் திரும்பிச் சென்றார்.













Click it and Unblock the Notifications