1950ம் ஆண்டை நோக்கி தமிழகம்: ராமதாஸ்
திண்டிவனம்:
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உயர் கல்வியில் உரிய இட ஒதுக்கீட்டை மறுப்பதன் மூலம் கல்வியிலும் சமூக ஏற்றத் தாழ்வுகளிலும் மீண்டும்1950களில் இருந்த நிலையை நோக்கி தமிழகத்தை அதிமுக அரசு கொண்டு போய்க் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் சமீபகாலமாக பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மக்களின் கவனமும் மீடியாவின் கவனமும் இந்தப் பரபரப்பானசெய்திகள் பக்கம் திரும்பியுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசு பல பாதகமான செயல்களையும், முடிவுகளையும் எடுத்து வருகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக இடங்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்த மாட்டோம் என அதிமுக அரசு அறிவித்துள்ளது.இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூக மக்களுக்கு ஜெயலலிதா அரசு செய்துள்ள மிகப் பெரிய துரோகம்.
இந்த மக்கள் விரோத மகா பாதமாக முடிவை அரசு எடுத்துள்ளதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டில்ஒதுக்கப்பட்டிருந்த 15 சதவீத இடங்கள் இல்லாமல் போய்விட்டன. இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் உயர் கல்விஉரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை சில காலம் தொடர்ந்தால் 1950களில் இருந்த சமூக-கல்வி ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கிவிடும்.
காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை தோண்டத் தோண்ட புதுப்புதுக் கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் முழுமையாகவிசாரிக்கப்பட வேண்டும். சங்கரராமன் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய 2 பேர் (இளையவர் மற்றும் அவரது தம்பி ரகு?)இன்னும் மடத்துக்குள் தான் உள்ளனர். அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.