For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை: 2 பேர் நடுரோட்டில் கொலை

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகே 2 இளைஞர்கள் இன்று பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகே 2 இளைஞர்கள் இன்று காலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அங்குவந்தது. இரண்டு இளைஞர்களையும் அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டினர்.

இதையடுத்து இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் கொலைக் கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாகவெட்டிக் கொன்றது.

தகவல் அறிந்ததும் வல்லம் டிஎஸ்பி கோதண்டம் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது.சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தஞ்சாவூரை கலவரப்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X