வங்கி மோசடி: ஆந்திர போலீசிடம் சிக்கும் உஷா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Ushaசென்னை:

வங்கியில் பண மோசடி செய்தது தொடர்பாக ஸ்ரீரங்கம் உஷாவைக் கைது செய்ய ஆந்திராவிலிருந்து போலீஸ் படை சென்னைக்குவருகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு தமிழக போலீசாரின் உதவியை ஆந்திர போலீஸ் நாடியுள்ளது.

ஜெயேந்திரருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக ஸ்ரீரங்கம் உஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ. 33.80 லட்சம் மோசடி செய்த வழக்கில் உஷாவைக் கைது செய்யஆந்திராவிலிருந்து போலீஸ் படை வருகிறது.

உஷாவுக்கும், அவரது கணவர் நாராயணனுக்கும் கடந்த 1996ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் திருமணம் நடந்தது. அப்போதுஉஷாவுக்கு வயது 39. திருமணம் நடந்தது கூட காளஹஸ்தியில் காஞ்சி மடத்துக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் தான்.

திருமணத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து குண்டேலுகுண்டா என்ற இடத்தில் செங்கல் சூளை அமைக்கத் திட்டமிட்டனர். இதற்காககாளஹஸ்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ. 33.8 லட்சம் கடன் பெற்றனர். இதற்காக காளஹஸ்தி, சென்னையில் உள்ள இருநிலங்களை செக்யூரிட்டியாகக் காட்டினர். அதற்கான பத்திரங்களை வங்கியிடம் தந்து கடன் பெற்றனர்.

இந்தப் பணத்தில் சுமேரு ஹவுசிங் மெட்டீரியல் லிமிடெட் என்ற சூளையை ஆரம்பிக்கப் போவதாகவும், அந்த நிறுவனத்தின் மேனேஜிங்டைரக்டராக உஷா இருப்பார் என்றும் வங்கியிடம் தெரிவித்தனர்.

ஆனால், செங்கல் சூளையை ஆரம்பிப்பதாக போக்கு காட்டிவிட்டு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். கடன் தொகையைத் திருப்பிசெலுத்தவில்லை. இதையடுத்து காளஹஸ்தி நிலத்தை ஜப்தி செய்ய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அப்போது தான் அந்தநிலம் உஷா-நாராயணனுக்குச் சொந்தமானதே அல்ல என்று தெரியவந்தது.

சரஸ்வதி என்பரின் நிலத்தை தங்கள் நிலமாக போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து வங்கியை ஏமாற்றியுள்ளனர். இதையடுத்துஇந்த இருவர் மீதும் காளஹஸ்தி காவல் நிலையத்தில் ஸ்டேட் வங்கியின் மேலாளர் பாலகிருஷ்ண ரெட்டி 2001ம் ஆண்டில் புகார்கொடுத்தார்.

Ushaபோலீசார் இருவரையும் தேடியபோது இருவரும் தலைமறைவாகியிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு நாராயணனை போலீசார் கைதுசெய்துவிட்டனர். ஆனால், ஜாமீனில் வெளியான அவர் தலைமறைவாகிவிட்டார். உஷாவைப் பிடிக்க முடியாமல் அம் மாநில போலீசார்தொடர்ந்து தேடி வந்தனர்.

ஸ்ரீரங்கம் வந்து விட்ட உஷா, வெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்ததற்கு இந்த வங்கி மோசடியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இந் நிலையில் ஜெயேந்திரர் விவகாரத்தில் உஷா வெளியுலகின் கண்ணில் பட்டுவிட்டார். ஜெயேந்திரர் விவகாரத்தையடுத்து இவர்சென்னையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஆந்திர போலீஸார், அவரைக் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து காளஹஸ்தி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறுகையில், வங்கி மோசடி வழக்கில் உஷாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாதவாரண்ட்டை கடந்த 30ம் தேதி காளஹஸ்தி நீதிமன்றம் பிறப்பித்தது. அப்படியும் கூட அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து ஆந்திரபோலீசிடம் இருந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இப்போது அவரைக் கைது செய்ய இருக்கிறோம். அதற்காக தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம். தமிழக போலீஸ் கிரீன்சிக்னல் கொடுத்தவுடன் எங்கள் படை அங்கு விரையும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+