அசோக் சிங்காலுக்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்
சென்னை:
ஜெயேந்திரரைக் கைது செய்ய உத்தரவிட்டது நான் தான் என்று முதல்வர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ள நிலையில், தொடர்ந்துசோனியாவை இதில் சம்பந்தப்படுத்தி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேசி வருவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயேந்திரரைக் கைது செய்ய நான்தான் உத்தரவிட்டேன். இது எனது அரசியல்வாழ்க்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான முடிவு என்று டெல்லியில் செய்தியாளர்களிடமே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந் நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தொடர்ந்து இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவைதொடர்புப்படுத்தி பேசி வருகிறார். இது அரசியல் அநாகரீகமானது, கண்டனத்துக்குரியது.
ஜெயேந்திரர் விவகாரத்தில் பாஜகவும், பிற சங் பவார் அமைப்புகளும் அரசியல் குளிர்காய நினைக்கின்றன என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications