திருட்டு விசிடி: 2 பேர் மீது குண்டாஸ்
மதுரை:
தமிழகத்திலேயே முதல் முறையாக திருட்டு விசிடி விற்பனை செய்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு விசிடியை விற்போர், புழக்கத்தில் விடுவோர், தயாரிப்போர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தலைநகர் சென்னையில் திருட்டு விசிடித் தயாரிப்போர் பெருமளவு குறைந்து விட்டனர்,விற்பனையும் மந்தமாகி விட்டது.
இந் நிலையில் மதுரையில் 2 திருட்டு விசிடி தயாரிப்போர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரை மாகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த லூர்து, ஜோசப் மாணிக்கம் ஆகிய இருவரும் திருட்டு விசிடி தயரிாத்தது தொடர்பாக சிலநாட்களுக்கு முன்பு கீரைத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் உள்ளே தள்ளப்பட்டனர்.
தமிழகத்திலேயே மதல் மபுறையாக மதுரையில்தான் திருட்டு விசிடி விற்பனை தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.