For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தையும் நாட முடிவு

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தரப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்றுஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் கூறினர்.

வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது வழக்கறிஞர்கள் தியாகராஜன் செல்லப்பா, சந்திரமெளலி ஆகியோர் சந்தித்துபேசினார்கள். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயேந்திரருடன் வழக்கு குறித்தோ, அவருடைய ஜாமீன் மனு நிலுவையில் இருப்பது குறித்தோ நாங்கள் எதுவும் பேசவில்லை.

ஜெயேந்திரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம்.வருகிற திங்கட்கிழமை ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.

அப்போது ஜாமீன் மனு நிராகரிக்கப்படுமேயானால், ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதற்கு நீதிமன்றம் கூறும் காரணங்களைநிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும்.

ஒருவேளை இங்கு அனைத்து வழிகளும் இடம்தராவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்றுகூறினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X