போலீசாரின் புதிய விசாரணை பங்களா!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் சங்கர மடம் மீதான புகார்களில் சிக்குவோரிடம் விசாரணை நடத்துவதற்குபுதிய பங்களா ஒன்றை காஞ்சிபுரம் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர சங்கர மடத்தில் நடந்தபல மர்ம சாவுகள் குறித்த புகார்களும் வெளிக் கிளம்பி வருகின்றன. இதேபோல பாலியல் புகார்களும் வெளியாகிவருகின்றன.
இந்த விவகாரங்களில் சிக்குவோர், சந்தேகத்திற்கு இடமானோர் என பல தரப்பினரையும் போலீஸார் தற்போதுகாஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்துத்தான் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் அங்கு பெரும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், மகளிர் காவல் நிலைய பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், விசாரணைக்காக தனி பங்களா ஒன்றை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. காஞ்சிபுரம் எஸ்.பியின்வீட்டுக்குப் பின்புறம் உள்ள அரசு பங்களாவை ரெடி செய்துள்ள போலீஸார், இனிமேல் விசாரணை அனைத்தும்இங்குதான் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த பங்களா பாதுகாப்பானது மட்டுமல்ல, பொதுமக்கள், பத்திரிக்கையாளர் நடமாட்டத்தை தடுக்க முடியும்என்பதால் இந்த பங்களாவை தேர்வு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
பங்களா ரெடியானவுடன் முதல் "போணியாக" சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் நேற்று இங்கு வைத்து 10மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications