உஷா விவகாரம்: காளஹஸ்தி விரைந்தது தனிப்படை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ஸ்ரீரங்கம் உஷா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மேல் விசாரணை செய்வதற்காக ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு தனிபோலீஸ் படை விரைந்துள்ளது.

ஜெயேந்திரருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் 2 நாட்கள்விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவரிடமிருந்து பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அவருக்கும், கணவர் நாராயணனுக்கும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான முதியோர்இல்லத்தில் வைத்துத்தான் திருமணம் நடந்துள்ளது.

இந் நிலையில் இன்று காஞ்சிபுரத்திலிருந்து ஒரு போலீஸ் படை காளஹஸ்தி விரைந்தது. சங்கர மட முதியோர் இல்ல நிர்வாகிகளைசந்தித்து உஷாவின் திருமணம் தொடர்பாகவும், அவருக்கும் மடத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் போலீஸார்விசாரிக்கிறார்கள்.

அதோடு ஸ்டேட் வங்கியில் உஷாவும், அவரது கணவர் நாராயணனும் செய்த பண மோசடி தொடர்பாகவும் தனிப்படையினர்விசாரிக்கவுள்ளனர்.

இதற்கிடையே, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடம் இன்றும் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இத்துடன் அவரிடம்மொத்தம் 9 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+