For Daily Alerts
Just In
ஆண்டிபட்டியில் மருத்துவமனை: ஜெ. திறப்பு
தேனி:
ஆண்டிபட்டி அருகே சண்முகநாதபுரத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாளைமறுநாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இந்த மருத்துவமனை 4 தளங்கள் கொண்டது. மொத்தம் 300 படுக்கை வசதிகள் கொண்டது. தற்போது மருத்துவமனை அறைகளில் பெயர்பலகைகள் பொருத்தப்பட்டு மருத்துவக் கருவிகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் மருத்துவமனையை ஜெயலலிதா திறந்து வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழா ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெறுகிறது. மருத்துவமனையின பின்புறம் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்குஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி ஜெயலலிதாாவின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, December 6, 2004, 5:30 [IST]