எனக்கும் சங்கரராமன் கதி...: அனுராதார மணன்
உத்திரமேரூர்:
ஜெயேந்திரரால் ஏற்பட்ட அவமானம் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறியிருந்தால் சங்கரராமனுக்கு முன்பாகவே நான் மேலேபோய் சேர்ந்திருப்பேன் என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு கையில் பகவத் கீதையுடன் வந்த அனுராதா ரமணன் சுமார் நான்கரை மணி நேரம்அங்கு ரகசிய வாக்குமூலம் அளித்தார். 12 ஆண்டுகளுக்கு முன் ஜெயேந்திரரை சந்தித்தபோது தனக்கு நடந்த பாலியல் அவமானம் குறித்துநீதிபதியிடம் அவர் விவரித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சொன்ன புகார் குறித்து மைதிலி ராகவன் தெரிவித்துள்ள கருத்துகுறித்து எனக்குக் கவலையில்லை. நான் ஒரு இந்து. கோவில் குளத்தை சுத்தம் செய்கிறார்கள், அது மாதிரி 2,500 வருட பழமை வாய்ந்தசங்கர மடத்தில் இருந்த அசுத்தத்தை பெருக்கும் துடைப்பமாக நான் உள்ளேன்.
இந்த வாய்ப்பு எனக்கு 44 வயதிலேயே வந்திருக்கலாம். 56 வயதான இப்போது வரை காத்திருந்திருக்கத் தேவையில்லை. ஆனால் நான்அப்போதே கூறியிருந்தால், யார் என்ன செய்திருக்க முடியும்? சங்கரராமனுக்கு முன்பே நான் போய்ச் சேர்ந்திருப்பேன்.
சங்கரராமன் ஜெயேந்திரர் குறித்து எழுதி வைத்த கடிதங்கள் இருந்ததால் அவரது இறப்புக்குக் காரணம் தெரிந்தது. ஆனால் நான்போயிருந்தால் யார் காரணம் என்று யாரைக் கூற முடியும்?
நான் உங்களது குடும்பத்தில் ஒருத்தி ஆக உள்ளேன். நான் உங்களைச் சேர்ந்தவள். 12 ஆண்டுகளாக மனதில் இருந்ததைக் கூறியுள்ளேன்.நீங்கள் அனைவரும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும். ஒரு ஆணால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம் இது.
டிவி தொடர்களில் இதுபோல வந்தால் அனைவரும் அழுகிறார்கள், பரிதாப்படுகிறார்கள். ஆனால் நிஜத்தில் எனக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
வாக்குமூலம் கொடுக்க முடிவு செய்தது நான்தான். யாரும் என்னைத் தூண்டவில்லை என்றார் அனுராதா.
சென்னை திரும்பும்போது அனுராதாவுடன் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியும் ஒரே வேனிலேயே வந்தார்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications