வேலூர் சிறையில் குவியும் பிரசாதம், கடிதங்கள்!
காஞ்சிபுரம்:
வேலூர் சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்களும், பிரசாதங்களும் குவிகின்றன.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் இந்தக் கடிதங்களை சென்சார் செய்ய ஒரு குழுவை நியமிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது சிறைநிர்வாகம்.
கூடுதல் எஸ்பி தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் குழு இந்தக் கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறது. இதில் சிக்கல் இல்லாத கடிதங்கள்ஜெயேந்திரரிடம் தரப்படுகின்றன. அரசை விமர்சிப்பது உள்ளிட்ட விவகாரமான வார்த்தைகள் கொண்ட மற்ற கடிதங்கள் கோணிப்பைக்குள் போட்டு ஓரம் கட்டப்படுகின்றன.
கோவில் பிரசாதம்:
இதே போல நாட்டின் பல்வேறு கோவில்களில் இருந்தும் பக்தர்கள், சங்கராச்சாரியாருக்கு பிரசாதங்களை அனுப்பி வருகின்றனர். ஆனால்,பாதுகாப்பு காரணங்களால் அவை சங்கராச்சாரியிடம் வழங்கப்படவில்லை.
பிரசாதமாக வரும் உணவுப் பொருட்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவதாகவும், விபூதி, குங்குமம் போன்றவை மட்டும் பத்திரமாகவைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications