செக் மோசடி: புவனேஸ்வரிக்கு பிடிவாரண்ட்
சென்னை:
செக் திரும்பி வந்த வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் சிக்கிய டிவி மற்றும் சினிமா நடிகையான புவனேஸ்வரி கடந்த 2002ம் ஆண்டுகனகதுர்கா என்பவரிடம் ரூ. 1.95 லட்சம் கடன் வாங்கினார்.
இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக 2 காசோலைகளை அவர் கனகதுர்காவிடம் கொடுத்தார். ஆனால் புவனேஸ்வரியின்வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு புவனேஸ்வரி மீதுகனகதுர்கா வழக்கு தொடுத்தார்.
சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. 4 முறை நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் புவனேஸ்வரி ஆஜராகவில்லை.
இந் நிலையில் புவனேஸ்வரி மீது நிலுவையில் உள்ள 2 காசோலை மோசடி வழக்குகளிலும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications