ஹாக்கி: இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி
லாகூர்:
சாம்பியர் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா இன்று பாகிஸ்தானிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இந்தியா, ஹாலந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபிஹாக்கிப்போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் ஸ்பெயினிடமும், ஹாலந்திடமும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில்ஜெர்மனியை வென்றது.
இந் நிலையில் 4-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா இன்று மோதியது. 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றஉற்சாகத்துடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் சாக்குலைன் முகமது முதல் கோல் அடித்தார். 58 வது நிமிடத்தில் இந்தியஅணியின் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்குக் கொண்டு வந்தார்.
67வது நிமிடத்தில் சோகைல் அப்பாஸ் பாகிஸ்தானுக்கு 2வது கோலைப் பெற்றுத் தந்தார். அதன்பின் இந்திய வீரர்கள் எவ்வலவோமுயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஹாலந்து அணி 4--- 2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.