விபச்சார வழக்கு: மாதுரி விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து நடிகை மாதுரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் செய்ததாக நடிகை மாதுரி உள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் மாதுரியைத்தவிர மற்ற 9 பேரும் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்து விட்டனர். ஆனால் மாதுரி மட்டும் அபராதம் செலுத்தவில்லை.
இதையடுத்து மாதுரி மீது வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாதுரி மீதான புகார் ஆதாரப்பூர்வமாகநிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி தீனதயாளன் மாதுரியை விடுதலை செய்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications