புதுவை சட்டசபைக்கு முகமூடியுடன் வந்த பாஜக எம்எல்ஏ
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைக் கூட்டத்திற்கு முகமூடி அணிந்து பாஜக உறுப்பினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை சட்டசபை கூடியபோது, பாஜகஉறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முகமூடி அணிந்து சபைக்குள் நுழைந்தார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் நிலவும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்தே இவ்வாறு முகமூடியுடன் வந்ததாக கிருஷ்ணமூர்த்திதெரிவித்தார்.
பின்னர் சபை கூடியதும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுதிய அட்டைகளைஏந்தியபடி பேசத் தொடங்கினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் 2 முறை வெளிநடப்புச்செய்தனர்.
பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான சட்டதிருத்த மசோதா நிறைவேற்றபட்டது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டம், பின்புகாலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக பழங்குடி இனத்தவருக்கு அங்கீகாரம் வழங்க கோரி சட்டசபை முன்பு மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.