ஜெ. அளித்த உதவி: பத்மா மனம் நிறைந்த நன்றி
காஞ்சிபுரம்: -
குற்றவாளிகளின் முகம் தங்களுக்கு நன்றாக நினைவில் இருப்பதாகவும், எப்போது அழைத்தாலும் அவர்களை அடையாளம் காட்ட முடியும்என்றும் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி பத்மா கூறினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எனது கணவர் கொலை செய்யப்பட்டபின்பு குடும்பம் நிறைய கஷ்டப்பட்டது. குழந்தைகளின் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது.எங்களுக்கு வங்கி இருப்பு ஏதும் இல்லை. அவர் இருந்தபோது மருந்துக்கடையில் மருந்து வாங்கிய வகையில் நிறைய கடன் இருந்தது.
மகள் உமா கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு எழுதக் கூட பணம் கட்ட முடியாத அளவுக்கு கஷ்டப்பட்ட நிலையில்தான், முதல்வர்ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ரூ. 5 லட்சம் உதவி அளித்தார்.
அதோடு எனது கணவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இருக்கிறார். அவருக்கு எங்கள்இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் வீட்டுக்கு வந்து எனது கணவரை விசாரித்து சென்ற குற்றவாளிகளின் முகம் எங்கள் அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கிறது.சென்னையில் நடந்த அடையாள அணிவகுப்பில் அவர்களை அடையாளம் காட்டினோம். எங்களை எப்போது அழைத்தாலும் அவர்களைஅடையாள காட்ட முடியும்.
எனது கணவர் சங்கர மடத்துக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. போலீஸ் விசாரணையிலும்அதைத்தான் கூறினோம். எனது கணவர் கடிதங்களை எங்களிடம் காட்டுவதோ, அலுவலகப் பணிகள் குறித்து எங்களிடம் விவாதிப்பதோகிடையாது.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கு ஜெயேந்திரர்தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதங்களை நாங்கள்பார்த்தது கிடையாது. காவல் துறையினர் வந்து மேசை டிராயரை உடைத்து பார்த்தபோதுதான் நிறைய கடிதங்கள் இருப்பதைப் பார்த்தோம்என்று கூறினார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்.. எரியாத எல்பிஜி அடுப்புகள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!











Click it and Unblock the Notifications