விமான நிலையம்: சூட்கேஸில் குண்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் நாட்டவரின் சூட்கேஸில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமன் நாட்டு உள்நாடுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முகம்மது அஜீத் என்பவர் மூட்டு வலியால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை வந்தார்.

கடந்த ஒரு மாதமாக அந்த மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிவடைந்த நிலையில் ஓமன் திரும்புதவற்காகசென்னை விமான நிலையத்திற்கு வந்தார் அஜீத்.

விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அஜீத்தின் சூட்கேஸ்களைசோதனையிட்டனர். அப்போது அதில் சில துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

தனது அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி ஓமனில் இருப்பதாகவும்,தோட்டாக்களை மட்டும் சூட்கேஸில் வைத்திருந்ததாகவும் அஜீத்தெரிவித்தார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டுதுப்பாக்கித் தோட்டாக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி எச்சரித்து விட்டு அவரை ஓமன் செல்ல அனுமதித்தனர். தோட்டாக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+