பூட்டில் வீட்டுக்குள் தம்பதி பிணம்
காங்கயம்:
காங்கயத்தில் பூட்டில் வீட்டுக்குள் கணவரும் மனைவியும் நிர்வாண நிலையில் பிணமாகிக் கிடந்தனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
காஜா மைதீன் (32) என்பவரது மனைவி சபானா (27). வேலை ஏதும் இல்லாத காஜா மைதீனுக்கு 3 குழந்தைகள். மனைவியை மைதீன் அடிக்கடி அடித்து துன்புறுத்துவது உண்டு என்று தெரிகிறது.
இந் நிலையில் குழந்தைகள் வெளியில் சென்ற நிலையில் மனைவியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். உடலுறவின்போதே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பின்னர் தானும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மைதீனின் கைகளில் இருந்த ரத்தம், கத்தியில் இருந்த அவரது கைரேகைகள், வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இது கொலை, தற்கொலையாகவே தெரிகிறது.
இருப்பினும் முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications