ஆடிட்டர்: ஜெயேந்திரரின் காவல் டிச. 23 வரை நீடிப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேரின்நீதிமன்றக் காவல் இன்று முடிவடைகிறது.
இதையடுத்து அவர்களது காவலை நீட்டிக்க 8 பேரையும் சென்னை சைதாப்பேட்டை 23வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியிருக்க வேண்டும்.
இவர்களில் ஜெயேந்திரர் மட்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஜெயேந்திரர் தவிர்த்து மற்றவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வேலூர் சிறையில் உள்ளஜெயேந்திரரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி விசாரணை நடத்தினார்.
பின்னர் ஜெயேந்திரர் மற்றும் 7 பேரின் சிறைக் காவலை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதே வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வெளியிடப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஜெயேந்திரருடன் ஆலோசிக்க நாளை அவரதுவழக்கறிஞர்கள் சுப்ரமணியம், கிருஷ்ணசாமி, தியாகராஜன், சண்முகம் ஆகியோர் வேலூர் சிறைச்சாலைக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரன், உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் குறித்துகேட்டிருக்கிறோம். அது கிடைத்ததும் அது குறித்தும் ஆராய்வோம். பின்னர் ஜெயேந்திரருடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்வோம் என்றார்.
இதே கருத்தை தியாகராஜன், சண்முகம் மற்றும் சுப்ரமணியம் ஆகியோரும் நிருபர்களிடம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications