நீதிமன்றத்தில் உஷா ரகசிய வாக்குமூலம்
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் உஷா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த உஷாவுக்கு ஜெயேந்திரர் ஏராளமான பணத்தையும், வீட்டையும் வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும்,அதிகாலை நேரத்தில் உஷாவுடன், ஜெயேந்திரர் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் சமீபத்தில் உஷா காஞ்சிபுரம் போலீஸாரிடம் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் அவர் உத்திரமேரூர் குற்றவியல் நீதிபதி ராமஜெயம் முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம்கொடுத்தார். (அவர் நீதமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் தரப் போவதை நேற்று காலையே தெரிவித்திருந்தோம்).
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு போலீஸாரிடம் என்ன கூறினேனோ அதையேஇப்போது நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளேன் என்றார்.
அவரது வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், வாக்குமூலம் கொடுப்பது என்பது உஷா எடுத்த முடிவு. இருப்பினும் நீதிமன்றத்தில்வாக்குமூலம் கொடுக்குமாறு போலீஸாரும் உஷாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.
சங்கரராமன் கொலை வழக்கில் உஷாவை ஒரு சாட்சியாக போலீஸார் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.